மசூலிப்பட்ணம் டூ சென்னை வரை அரசு பஸ் ரூட்…! 

ஆந்தரா மாநிலமான மசூலிப்பட்ணம் முதல் சென்னை வரை ஏசி பஸ் சேவை நேற்று தொடங்கப்பட்டது.

மசூலிப்பட்ணம் முதல் சென்னை வரை செல்லவும். மறு மார்கம் சென்னை முதல் மசூலிப்பட்ணம் வரை செல்லவும் பஸ் ரூட் சேவை மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. அதன் படி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் (ஆர்டிசி) கருடா ஏசி பஸ் சேவையை ஆந்திர மாநில போக்குவரத்து அமைச்சர் பி.வெங்கடரையா நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த பஸ் மசூலிப்பட்ணம் முதல் சென்னை வரை செல்லும். அந்த பேருந்து குண்டுர், ஆன்குலூ, கவளி, நெல்லூர் ஆகிய வழி தடங்களில் பயணம் செய்யும் என்றும் இந்த பயணம் சுமார் ஒன்பதரை மணி நேரம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version