போகுமிடமெல்லாம் பொய்சொல்வதா? ஸ்டாலினை விளாசும் முதல்வர்

சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நட்ராஜை ஆதரித்து, மயிலை மாங்கொல்லையில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நகரமாக சென்னை உள்ளது என பெருமிதத்துடன் தெரிவித்தார். இது அதிமுக அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த விருது என்று அவர் கூறினார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை எனவும் முதலமைச்சர் சாடினார். அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெற்றிக்குப் பிறகு நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டார்.

Exit mobile version