ரூ.120 கோடி மோசடி :தயாரிப்பாளர் கருணாமூரத்தி மீது லைகா நிறுவனம் புகார்

ஐங்கரன் பட தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கருணாமூர்த்தி, 120 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் லைகா பட நிறுவனம் புகார் அளித்துள்ளது.

ஐங்கரன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கருணாமூர்த்தி, தனது உதவியாளரான பானு என்பவருடன் சேர்ந்து, தங்களை ஏமாற்றி சுமார் 120 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக லைகா தயாரிப்பு நிறுவன இயக்குநர் நீலா காந்த், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கருணாமூர்த்தி தனது உதவியாளர் பானு என்பவருடன், லைகா நிறுவனத்தின் ஆலோசகராக, கடந்த 2013 ஆம் ஆண்டு இணைந்தாகவும், லைகா தயாரித்த படங்களின் அயல்நாட்டு உரிமத்தை விற்றதில், பல்வேறு முறைகேடுகளை செய்த கருணாமூர்த்தி மற்றும் பானு, தங்களுக்கு 120 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐங்கரன் கருணாமூர்த்தி ஏற்படுத்திய இந்த நஷ்டத்திற்கான தகுந்த இழப்பீட்டை பெற்றுத் தர, காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Exit mobile version