கோவை ஆர்.எஸ்.புரத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், ராமச்சந்திராபுரம், சித்தி விநாயகர் கோவில் வீதி, சாந்தோம் வீதி உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம் பேருக்கு மதிய உணவுத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி, மதிய உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றவர்கள் உள்ளிட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரையும் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

Exit mobile version