திமுக தரப்பினருக்கு லயோலா கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அவதூறுகளை பரப்பும் திமுக தரப்பிற்கு லயோலா கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து லயோலா கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற பெயரில் லயோலா முன்னாள் மாணவர்கள் எடுத்துள்ள கருத்துக் கணிப்பிற்கும் லயோலா நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கருத்துக் கணிப்புகள், ஆய்வறிக்கைகளை வெளியிட தங்கள் நிர்வாகத்தில் எந்த துறைகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கருத்துக்கணிப்புகளை வெளியிடும் போது, லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு என ஊடகங்கள் செய்தி வெளியிட கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version