திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 'அன்பு சுவர்'

இருப்போர், இல்லாதோருக்கு கொடுக்கும் வகையில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் ‘அன்பு சுவர்’ அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்களுக்கு தேவையற்ற ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் உள்ளிட்டவைகளை அன்பு சுவரில் வைத்து விட்டு செல்லலாம் என்றும், தேவைப்படுவோர் அதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அன்பு சுவர் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ‘முயற்சி’சமூக நலச் சங்கம் சார்பில் அன்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் தயாளன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திருவள்ளூர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டது போலவே திருத்தணி, பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ‘அன்பு சுவர்’ அமைக்கப்படும் என்றார்.

Exit mobile version