திருவண்ணாமலை அருகே மலை உச்சியில் இருந்து குதித்த காதல் ஜோடி

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சினிமா பாணியில் மலை உச்சியில் இருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கம் புதுப்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமாரும், ஆம்பூரைச் சேர்ந்த நீலாம்பரியும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த காதல் ஜோடி, போளூரில் உள்ள சப்தகிரி மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தனர்.

Exit mobile version