காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞரை, கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடப்பா மாவட்டம் சென்னூர்ராஜு பள்ளி கிராமத்தை சேர்ந்த சரண் என்பவர் சிந்தலசெரு கிராமத்தைச் சேர்ந்த சிரிஷா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிரிஷா காதலை ஏற்க மறுத்ததால்ஆத்திரமடைந்த சரண், கடைசியாக பேச வேண்டும் என தனியாக அழைத்து, சிரிஷாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.

சிரிஷாவின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், சரணை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த சிரிஷாவை மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காயங்களுடன் இருந்த சரணை சிகிச்சைக்காக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Exit mobile version