அரசு மதுபானம் ஏற்றி வந்த லாரி மீது மணல் லாரி மோதி விபத்து

திட்டக்குடி அருகே ஏற்பட்ட விபத்தில் இரண்டு லாரிகள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபானம் ஏற்றி சென்ற லாரி ஒன்று, கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சியில் இருந்து ஆற்று மணலை ஏற்றுக்கொண்டு சென்ற லாரி ஒன்று, சாலையில் உள்ள தடுப்புக்கட்டையை தாண்டி, மதுபானம் ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில், இரண்டு லாரியும் தீப்பற்றி எரிந்தன. இதில், மதுபானம் ஏற்றி வந்த லாரியில் இருந்த எட்டரை லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து நாசமாயின. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, விபத்தில் காயமடைந்த லாரிகளின் ஓட்டுனர்கள் திட்டக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version