மளிகை கடைகளை குறித்து வைத்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள்

சென்னை வில்லிவாக்கத்தில், மளிகை கடைகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வில்லிவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அருண் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், ஷட்டரை திறக்க முயற்சி செய்துள்ளனர். ஷட்டர் திறக்காததால், அதே பகுதியில் உள்ள ஜெனார்த்தனன் என்பவரது கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னர், பாலியம்மன் கோவில் தெருவில் உள்ள ரமேஷ்பாபு என்பவருக்கு சொந்தமான பெட்டிகடையின் பூட்டை உடைத்து, 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மர்ம நபர்கள் குறித்து அருண் பிரகாஷ் வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version