இரு கோயில்களின் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை

திருவொற்றியூர் அருகே இரு கோயில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முருகன் கோயில்களில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாவூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பழமை வாய்ந்த முருகன் கோவிலின் முன்பிருந்த இரும்பு கிரில் கேட் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பெரிய உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகரில் உள்ள முருகன் கோயிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பங்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version