சயன், மனோஜ் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நீலகிரி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ்

கொடநாடு விவகாரம் தொடர்பாக சயன், மனோஜ் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நீலகிரி மாவட்ட போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கில் சயன், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ஊட்டி நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. இதனைதொடர்ந்து, இருவரையும் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சயன், மனோஜ் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில், இரண்டு பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை நீலகிரி போலீசார் பிறப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version