லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த பொழுது அவருக்கு லண்டனின் புகழ்பெற்ற மருத்துவர் ரிச்சர்ட் பீலே மருத்துவம் பார்த்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி ஆணையம், அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது.

இதனையடுத்து ரிச்சர்ட் பீலே வரும் 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த விசாரணையில் ரிச்சர்ட் பீலே காணொலி காட்சி மூலம் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version