விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் பாரப்பு தீர்ப்பு

விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் பாரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சம் புகுந்தார்.

அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்தது . மல்லையாவை நாடு கடத்துமாறு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது பல மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

வங்கிகளில் பெற்ற கடனை, திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்த நிலையில், லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார்.

Exit mobile version