திமுக நன்றி அறிவிப்பு கூட்டத்தை புறக்கணித்த மக்களவை உறுப்பினர்

முதுகுளத்தூரில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நன்றி அறிவிக்கும் கூட்டத்தை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி புறக்கணித்தது கூட்டணி கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. திமுக கூட்டணி சார்பில், அந்த தொகுதியில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கலந்து கொண்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக நவாஸ்கனி பங்கேற்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த தொண்டர்கள், வாக்களித்த மக்களுக்கு நன்றி கூட சொல்ல முடியாத நவாஸ்கனிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Exit mobile version