மக்களவைத் தேர்தல்: அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலின் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரன்புரா வாக்குசாவடியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தன்னுடய வாக்கை பதிவு செய்தார். குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ராஜ்கோட் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். 97 வயதான ஹீராபென், நடந்து வந்து ஆர்வமுடன் தனது வாக்கினை பதிவு செய்தது காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதேபோல், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் புவனேஸ்வரில் உள்ள வாக்குசாவடியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். ஒடிசா மாநிலத்தில் சட்டமன்றம், மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

Exit mobile version