ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரிப்பு

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏழுமலைக்கு ஆதரவாக அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்சித்தாமூர், வல்லம், ஏதாநெமிலி, அருகாவூர், மேல்அத்திப்பாக்கம், நீர்ப்பெருத்தகரம் உள்ளிட்ட 50க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏழுமலைக்கு ஆதரவாக அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர பிரசாரம் செய்தார்.

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி அமைச்சர் சண்முகம் வாக்கு சேகரித்தார். செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்து மேளதாளங்களுடன் ஆரத்தி எடுத்தும் கூட்டணி கட்சியினர் வரவேற்றனர்.

Exit mobile version