சிறப்பு வசதிகளுடன் கூடிய தாழ்தளப் பேருந்து -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, சிறப்பு வசதிகளுடன் கூடிய தாழ்தளப் பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உள்விளையாட்டு மைதானத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிடடு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன. இதனை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் செல்லும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version