தமிழ்நாட்டில் டீக்கடைகள், சலூன் கடைகள் திறப்பு

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளுடனான ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து, 27 மாவட்டங்களில் டீக்கடைகள் மற்றும் சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வருகிற 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டீக்கடைகளை திறக்கப்பட்டன. இதேபோல், செல்போன், வீட்டு உபயோக மின் பொருட்கள், பழுது நீக்கும் கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டன.

Exit mobile version