இன்று முதல் உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி

புதிய தளர்வுகளின் படி, இன்று முதல் உணவகங்கள், தேநீர் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை விற்பனை கடைகள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரிக்கு மட்டும் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருமண நிகழ்வில் 50 பேரும், துக்க நிகழ்வில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால், பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பார்கள், திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை. அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கான தடை தொடர்கிறது.

Exit mobile version