உள்ளாட்சித் தேர்தல் : ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே அறிவித்த அறிவிப்பாணையை மாநிலத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. அதன்படி, உள்ளாட்சித் தேர்தல் உதவி அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் நியமனங்கள் திரும்ப பெறப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Exit mobile version