குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டரின் 187வது அவதார தினத்தையொட்டி நாகர்கோவிலில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய அய்யா வைகுண்டர், மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த அவதாரமாக பார்க்கப்படுகிறார். அவரின் 187வது அவதார தினத்தையொட்டி அய்யா வழி சமூகத்தினர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரமாண்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டு, சுவாமி தோப்பு நோக்கி பாதயாத்திரையாக சென்றனர். அய்யாவின் அகில திரட்டு நூல்கள் அடங்கிய பூப்பல்லக்கு முன் செல்ல சிறுமிகளின் கோலாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்களும் இந்த பேரணியில் இடம்பெற்றது.

Exit mobile version