உள்ளாட்சித் தேர்தல் – இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறுத்து, அனைத்துக் கட்சி கூட்டத்தை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று நடத்துகிறது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், இன்று நடக்கும் இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன. அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்க இருக்கிறார். கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்கப்பட உள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் கோரியிருந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் மூன்றாவது முறையாக அவகாசம் கோரியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version