உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: தேமுதிக பிரேமலதா

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக்கழகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த், துணை செயலாளர் சுதீஷ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், சிறந்த தமிழகத்தை உருவாக்க அதிமுக கூட்டணி கட்சியுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார்.

Exit mobile version