ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றார் எல்.கே.அத்வானி

ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்ற பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடியில் நேற்று அவர் படகு சவாரி செய்தார். கடந்த 7-ம் தேதி கேரளா வந்த அவர், அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்கிறார். அவருடைய இந்த வருகை மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில், அத்வானி தனது குடும்பத்தினருடன் நேற்று படகு சவாரி செய்து மகிழ்ந்தார். கேரள அரசுக்குச் சொந்தமான படகில், சவாரி செய்த அத்வானியோடு அவரது மகள் பிரதீபாவும் இருந்தார். வரும் 13-ம் தேதி வரை அத்வானி கேரளாவில் தங்கி இருந்து சிகிச்சை மேற்கொள்கிறார்.

Exit mobile version