புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்!

விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி எல்லைக்குட்பட்ட பகுதிகளான கெங்கராம்பாளையம், கோலியனூர் ஆகிய இடங்களில் மதுவிலக்கு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்

விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி எல்லைக்குட்பட்ட பகுதிகளான கெங்கராம்பாளையம், கோலியனூர் ஆகிய இடங்களில் மதுவிலக்கு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர் . அப்பொழுது அடுத்தடுத்து வந்த 4, நான்கு சக்கர வாகனங்களை சோதனை செய்த போது அந்த வாகனங்களில்
புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து, கடத்திவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், வாகனங்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Exit mobile version