தீபாவளியையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.330 கோடிக்கு மது விற்பனை

தீபாவளிப் பண்டிகையையொட்டி மூன்று நாட்களில் டாஸ்மாக் கடைகளில் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு விற்பனையாவது வழக்கம். நேற்று தீபாவளிப் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனிடையே, தீபாவளியையொட்டி டாஸ்மாக் கடைகளில் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மூன்று நாட்களில் இந்த அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 70 கோடி ரூபாய் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.

Exit mobile version