மதுக்கடையில் முண்டியடித்துக் கொண்டு மதுபாட்டில் வாங்கிய மதுப்பிரியர்கள்

கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் இன்றிரவு 10 மணி முதல் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, டெல்லி முழுவதும் உள்ள மதுக்கடைகளில், மதுபிரியர்கள் கூட்டம் அலை மோதியது. கோலே சந்தைப் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கினர். சிவபுரி கீதா காலனி பகுதியில் செயல்படும் மதுக்கடையில் வரிசையில் நிற்காமல், மதுபிரியர்கள் முண்டியடித்துச் சென்றனர். பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும், மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கினர். ஒரு வாரத்திற்கு தேவையான மதுபாட்டில்கள் இல்லையென்றாலும் கிடைத்தது போதும் என்ற அளவுக்கு மதுபாட்டில்களை வாங்கினர்.

Exit mobile version