கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடைபெறும் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பட்டமரத்தான் கோயில் விழாவையொட்டி, வரும் 20ம் தேதி மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான கால்கோள் விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி, தகுந்த பாதுகாப்புடன் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தை தொடர்ந்து, புதுக்கோட்டை விராலிமலையில் வரும் 20ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க உள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில், ஆயிரத்தி 800 காளைகள் கலந்து கொண்டன. அதேபோல, இந்த ஆண்டும் போட்டிகள் சிறப்பாக நடைபெறும் என்று தெரிவித்தார்.

Exit mobile version