உதவி கேட்பது போல் நடித்து செல்போன் திருடிய கும்பல் கைது

சென்னையில், உதவி கேட்பது போல் நடித்து செல்போன் திருடும் கும்பலை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

சென்னை அண்ணாநகர் பகுதியில் சிஜாய் சாமுவேல் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் நண்பர்களுடன் வந்த ஒருவர், அவசரமாக பேசவேண்டும் என்று கூறி செல்போனை கொடுத்து உதவும்படி கேட்டுள்ளார். சாமுவேலும் தனது போனை கொடுத்துள்ளார். போன் பேசுவது போல் சிறிது தூரம் நடந்து சென்ற அந்த நபர், தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து, மணிகண்டன், சதீஷ்குமார், சரத் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், மூவரையும் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version