மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 60 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டாயிரத்து 436 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை ஆயிரத்து 695 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 ஆயிரத்து 786 பேர் குணமடைந்துள்ளனர். மும்பையில் மட்டும் நேற்று ஆயிரத்து 430 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version