கலங்கரை விளக்கு முதல் பட்டினப்பாக்கம் வரை ரூ. 19 கோடி செலவில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி

சென்னை கலங்கரை விளக்கு முதல் பட்டினப்பாக்கம் வரையிலான கடற்பரை பகுதியை தூய்மைப் படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

சென்னை மெரினா, எலியட்ஸ், கொட்டிவாக்கம் கடற்கரையை அழகு படுத்த 19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் கலங்கரை விளக்கு முதல் பட்டினப்பாக்கம் வரையிலான கடற்கரை சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிகொள்வதாக வியாபாரிகள் கூறியதையடுத்து கடற்கரை சாலையை தூய்மை செய்யும் பணி துவங்கியது.

Exit mobile version