தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version