ராகுல், ஹர்திக் பாண்ட்யா மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்

பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் லோகேஷ் ராகுலுக்கு விதிக்கப்பட்ட தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் மீது நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்கள் விளையாடுவதற்கு தடை விதித்தது.இந்த நிலையில் பாண்டியா மற்றும் ராகுல் மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்குவதாக பிசிசிஐ-யின் நிர்வாகக் கமிட்டி அறிவித்துள்ளது. ஆனாலும் இது குறித்த நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக பிப்ரவரி 5 ம்தேதி விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே தடை நீக்கப்பட்ட ஹர்திக்  பாண்ட்யா நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணிக்கு திரும்புகிறார். ராகுல், இந்திய ஏ அணியில் இணைந்து கொள்கிறார்.

Exit mobile version