மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநருக்கு கடிதம்

மத்திய பிரதேசத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.
230 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற 2 இடங்கள் தேவை என்பதால், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை நாடியுள்ளது.

தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளதால், ஆட்சியமைக்க உரிமைகோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Exit mobile version