அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம்!!!

ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்காக தனி பாதையை ஏற்படுத்த வேண்டும் என, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கும், பெருநகர சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நகர்புறங்களில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக, நோய்த்தொற்று அல்லாதவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் புதிய நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறைகள் உள்ளிட்டவை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொரோனா தொற்றுடன் வருபவர்களுக்காக, தனிப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version