கூடுதல் ஒதுக்கீடு கேட்டு கடிதம்: முதலமைச்சருக்கு ஹஜ் கமிட்டி நன்றி

ஹஜ் யாத்திரை செல்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முதலமைச்சர் பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதற்கு, ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 3 ஆயிரத்து 534 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு நன்றி என கூறியுள்ளார். இருப்பினும், கூடுதலாக ஆயிரத்து 500 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிகேட்டு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version