திருவாடானையில் பட்டதாரி இளைஞர்கள் மூலம் மாணவர்களுக்கு பாடம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆசிரியர்கள் வராததால், அங்குள்ள பெருமாள் கோயிலில் பட்டதாரி இளைஞர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். திருவாடானையை அடுத்த கீழ்க்குடி கிராத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் போராட்டத்தையடுத்து பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால், பொதுமக்கள் சார்பில் மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் பட்டதாரி இளைஞர்கள் மூலம் பாடம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெருமாள் கோயிலில் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாடம் கற்றனர். 

Exit mobile version