எலுமிச்சை அதிக விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லை : விவசாயிகள் வேதனை

எலுமிச்சை பழ விளைச்சல் அமோகமாக இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். விருதுநகர் அருகேயுள்ள மீசலூர், தாதம்பட்டி,ஆமத்தூர் பகுதியில் எலுமிச்சையை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர் . நாளோன்றுக்கு 50 முதல் 60 கிலோ வரையிலான எலுமிச்ச பழங்களை விவசாயிகள் பறிக்கின்றனர்.

எனினும் போதிய விலை இல்லாததால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு கிலோ எலுமிச்சம் பழம் கடந்த ஆண்டு 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலை போன நிலையில், தற்போது 20 முதல் 30 ரூபாய் வரையே விற்பதாக கூறும் விவசாயிகள், அதிக செலவு செய்தும் போதுமான லாபம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

Exit mobile version