கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு

முதலமைச்சரின் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 ஏரிகளும், 425 குளம், குட்டைகளிலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் பிராபகர் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பேசிய ஆட்சியர், 90 சதவீத குடிமராமத்து பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version