கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சிகளின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version