சட்டப் பேரவை மூன்றாம் நாள் கூட்டம்: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டப் பேரவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். இதைதொடர்ந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் நன்றியுரையின் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

Exit mobile version