இ சிகரெட்களைத் தடை செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றம்

இ சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இ சிகரெட்கள் மனிதரின் உடல் நலத்துக்குத் தீங்கு என்பதால் அவற்றின் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, இருப்பு வைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதித்து செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இ சிகரெட்டுக்குத் தடை விதிக்கும் சட்ட மசோதாவை மக்களவையில் அமைச்சர் ஹர்சவர்த்தன் கொண்டுவந்தார். இந்த மசோதாவில் இ சிகரெட்களின் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, இருப்பு வைத்தல், விளம்பரம் ஆகிய அனைத்துக்கும் தடை விதிக்க வசை செய்யப்பட்டுள்ளது. இ சிகரெட்களின் தீங்கையும் அதைத் தடை செய்ய வேண்டியதன் தேவையையும் அமைச்சர் ஹர்சவர்த்தன் எடுத்துரைத்தார். இதையடுத்துப் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் இ சிகரெட் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.

Exit mobile version