சிறுமியை கர்ப்பிணியாக்கி விட்டு வேறு பெண்ணுடன் திருமணம் செய்த நபர் கைது!!

மதுரையில், 16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த உதயகுமார் என்பவர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கர்ப்பமடைந்த சிறுமி உதயகுமாரிடம் திருமணம் குறித்து பலமுறை கேட்டும் அவர் மறுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், உதயகுமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதை அறிந்த அந்த சிறுமி, அவர் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, நிலக்கோட்டை விரைந்த காவல்துறையினர், உதயகுமாரை திருமண மண்டபத்திலேயே வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டார். திருமணம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே மணமகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version