கஜா புயல் – 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை  – அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிச.13-க்கு மாற்றம்

கஜா புயல் காரணமாக கடலூர், ராமநாதபுரம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகை வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எண்ணப்பட்ட, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் சிதம்பரம் அண்ணாமலை, காரைக்குடி அழகப்பா, திருச்சி பாரதிதாசன், வேலூர், திருவள்ளுவர், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி, மற்றும் புதுச்சேரி பல்கலைகழகங்களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைகழக பொறியியல் தேர்வுகள் டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version