முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு, தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலனில் வீறுநடை போட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா 2 ஆயிரம், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாணவர் நலத்திட்டங்கள் என எண்ணற்ற மக்கள் நலத்திட்டப் பணிகளை பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தி, தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றி வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நல்லாட்சி தந்த முதலமைச்சருக்கு தொண்டர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version