அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரம்-அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிற்பகலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். சூலூர் தொகுதியில் விடுபட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

Exit mobile version