வழக்கறிஞர்கள் நீதிமன்ற நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்-நீதியரசர் புகழேந்தி

நீதிமன்ற புறக்கணிப்பு, வழக்கு ஒத்திவைப்பு போன்ற நிகழ்வுகளை வழக்கறிஞர்கள் கைவிட்டுவிட்டு, விரைந்து வழக்குகளை முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார். பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர் நீதி மன்றம் மற்றும் வேப்பந்தட்டை நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை, உயர்நீதி மன்ற நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு மற்றும் புகழேந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நீதியரசர் புகழேந்தி, வழக்கறிஞர்கள் நீதிமன்ற நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும். நீதியை நிலை நாட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version