சட்டக்கல்லூரி மாணவியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை : 12 பேர் கைது

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சட்டக் கல்லூரி மாணவியைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்த 12 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆண் நண்பருடன் சாலையில் சென்ற சட்டக் கல்லூரி மாணவியை வழிமறித்த இருவர், அந்த ஆண் நண்பரைத் துரத்திவிட்டுப் பெண்ணை மறைவான இடத்துக்கு இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் தங்கள் நண்பர்கள் 10 பேரையும் அழைத்து வந்து அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்துக் குற்றவாளிகள் 12 பேரையும் கைது செய்தனர்.

பிடிபட்டவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், ஒரு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 12 பேரையும் முகத்தை மூடிச் செய்தியாளர்கள் முன் ஆஜர்படுத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.

Exit mobile version