”கட்டப்பஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை” – சங்கர் ஜிவால்

சென்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையின் புதிய காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள சங்கர் ஜிவால், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

முழு ஊரடங்கு காலத்தில், விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும் என்றார்.

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்தாலோ, சென்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்தலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version